மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி சார்பில் உலக புத்தக தினவிழா

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவிகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கலைநிகழ்ச்சி மற்றும் சொற்பொழிவு நடத்தினார்கள்.



விழாவிற்கு பள்ளி செயலாளர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் ஞானபண்டிதன் வரவேற்றார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் நூலகத்தை திறந்து வைத்தார். மேட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை கவிஞர் கவிதாசன் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவர்கள் புத்தகம் படிப்பதின் அவசியம், பற்றியும், படித்து உயர்ந்த உலகத்தலைவர்கள் பற்றியும் உரையாற்றினார்கள். 



விழாவில் சவிதா மருத்துவமனை டாக்டர் சசித்ரா, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் மணி, நுகர்வோர் இயக்க தலைவர் ரெயின்போ வெங்கடராமன், சேவ் பவானி அமைப்பின் நிர்வாகி மணி, ரோட்டரி சங்க நிர்வாகி சுந்தர கணேஷ், உறுப்பினர் ஜெயராமன், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதல்வர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். பொதுமக்கள் படித்து பயன்பெற பல்வேறு தலைப்புக்கள் இடம்பெற்ற புத்தக கண்காட்சி நடந்தது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...