'புத்தகம் வந்த பின்தான் குரங்கிலிருந்து மனிதன் வெளிப்பட்டான்' உலக புத்தக தின விழாவில் -மரபின் மைந்தன் முத்தையா பேச்சு

உலக புத்தக தினமான இன்று கோவை ஏ.டி.டி காலனி பகுதியில் உள்ள 'தி இந்து' நாளிதழ் அலுவலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. 



உலக புத்தக தினத்தையொட்டி தி இந்து-வின் பதிப்பு புத்தகங்கள் 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர். விழாவில் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

அப்போது, வாசகர்களிடையே அவர் பேசுகையில், 'குழந்தைகளுக்கு நூல்களை கண்ணில் காட்டுங்கள், அவர்கள் படிக்க மாட்டார்கள் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டாம். புத்தகத்தை வாசிக்க தொடங்கிய பின்னர்தான் குரங்கிலிருந்து மனிதன் வெளிப்படத் தொடங்கினான். ஒவ்வொரு புத்தகத்தையும் உங்கள் வீடுகளில் குடியேற்றும் போதும்தான் ஒரு அறிஞரை உங்கள் வீட்டுக்கு குடியேற்றுவதாக அர்த்தம்' என்றார்.

 

இவ்விழாவில் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சரவணன் மற்றும் 'தி இந்து' நாளிதழின் துணை மண்டல மேலாளர் ஜெகதீஸ்குமார், கோவை புத்தக திருவிழா குழுவினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...