ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த் ?


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்து எடுக்க பிரதான அரசியல் கட்சிகள் இப்போதே ஆலோசனை நடத்த தொடங்கி இருக்கின்றன.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ்குமார் சந்தித்து பேசி உள்ளார். புதிய ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ.க. தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜார்க்கண்ட் மாநில பெண் கவர்னர் திரவுபதி முர்மும், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

அதே போன்று தென்னிந்தியாவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பெயரும், தொழில் அதிபர் "இன்போசிஸ்" நாராயண மூர்த்தி பெயரும் ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகிறது.

ஜனாதிபதி பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிசீலனையில் இருப்பதாக வரும் செய்திகள், தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்களின் தேவையறியாத ஒருவர், அவர் யாராக இருந்தாலும் ஒரு பிரபலமானவராக இருந்தால் மட்டுமே போதும் மக்களின் ஆளும் சக்தியடைவார் என்பதற்கு உதாரணமே தற்போது நடிகர் ரஜினியின் பெயர் ஜனாதிபதி தேர்தல் வரை சென்றிருப்பது ஆகும்.

பெரும்பாலான மக்களின் மனநிலையும் பிரபலங்களை நோக்கியே உள்ளதால் சில அரசியல் கட்டமைப்புகளுக்கான தகுதிகள் அற்றவரை ஆராய்ந்து பாராமல் தேர்வு செய்துவிடுகின்றனர்.

மக்கள் அந்த மனநிலையை மாற்றி சிறந்த நாட்டுப்பற்றும் பொதுநலமும் உடைய நபரை தங்களை ஆளும் ஒருவராக தேர்ந்தெடுப்பதினால் மட்டுமே நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் தீரும், மக்களின் வாழ்வும் சிராகும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...