கோவை மதுக்கரையில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்க எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு

கோவை மதுக்கரையில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது. குவாரிகள் மீண்டும் இயங்கினால் விவசாய குடும்பங்கள் பாதிப்படையும் என எச்சரிக்கை.


Coimbatore: கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயக்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி அளித்த மனுவில், மதுக்கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 அடி ஆழம் வரை தோண்டி எடுக்கப்பட்ட கல்குவாரிகள் தடைசெய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவற்றை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



இந்த கல்குவாரிகள் மீண்டும் இயக்கப்பட்டால், அதன் அருகாமையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இத்தகைய கல்குவாரிகளை இயக்க நடக்கும் முயற்சியை தடை செய்ய வேண்டும் என்றும், புதிதாக அனுமதி கோரும் இத்தகைய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



பழனிசாமி மேலும் கூறுகையில், முதற்கட்ட நடவடிக்கையாக இதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க உள்ளதாகவும், விதி மீறல்கள் ஏற்படும் பட்சத்தில் நீதிமன்றத்திற்கு சென்று அத்தகைய விதி மீறல்களை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பிரச்சினை தொடரும் பட்சத்தில் விவசாயிகள் வேறுவிதமான போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...