நீலகிரியில் வீட்டின் கூரையை உடைந்து உள்ளே விழுந்த குட்டி யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வீட்டின் கூரையை உடைந்து குட்டி யானை வீட்டுக்குள் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோழிபாலம் பகுதியில் வசித்துவருபவர் தவுபிக், இவரது மனைவி ஜெமீலா. அப்பகுதயில் சாலையோர மலைச் சரிவுக்குட்பட்டு வனப் பகுதியில் இத்தம்பதியினரின் வீடு உள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் இவர்கள் உறங்கிக்கொண்டிருக்கையில் திடீரென வீட்டின் கூரையை உடைத்து ஒரு யானைக் குட்டி உள்ளே விழுந்துள்ளது. இதனைக்கண்ட ஜெமீலா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். 



இதனிடையே வீட்டுக்குள் விழுந்த குட்டி யானை, வீட்டை விட்டு வெளியேற முறச்சித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளது. இதில் ஜெமிலாவிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில், தனது குட்டியை தேடி வந்த தாய் யானை, மேலும் சில யானைகளுடன் வீட்டின் வெளியே நின்றது. யானைக் கூட்டத்தைப் பார்த்து பதற்றமடைந்த ஜெமீலா மற்றும் அவரது மாமனார், மாமியார் மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்தனர்.



வெளியே நின்ற யானைக் கூட்டம், வீட்டின் சமையல் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று தனது குட்டியை மீட்டது. தொடர்ந்து, அந்த யானைக் கூட்டம் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.



இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் கணேசன் மற்றும் வன ஊழியர்கள் ஜெமீலாவின் வீட்டை ஆய்வு செய்தனர். பின், கூடலூர் மருத்துவமனையில் காயமடைந்த ஜெமீலா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...