விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியது யார்?: மகனின் சாவில் உரிய விசாரணை வேண்டி பெற்றோர் புகார்

கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாரன். ஓய்வுபெற்ற இராணுவ வீரர். இவரது மனைவி சாந்தி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் சித்தார்த் (19) அதேப் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் தற்போது 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

இந்நிலையில், நேற்று சித்தார்த் தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இரவு 10 மணியளவில் சுங்கம் பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவற்றில் மோதி சித்தார்த்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு 21-வது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சித்தார்த்தை சிறிது நேரத்தில் மர்மநபர் ஒருவர் அழைத்துச் சென்று சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து சித்தார்த்தும் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின் மீண்டும் அந்த மர்மநபர் சித்தார்த்தை அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கே அழைத்துவந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்தார்த் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் மகன் சித்தார்த் உயிரிழந்தது குறித்து தகவலறிந்து அதிர்ச்சிக்குள்ளாகினர். தொடர்ந்து, தனது மகனை எதற்காக இங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினீர்கள் என்று மருத்துவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இருப்பினும் மருத்துவர்கள் முறையாக பதிலளிக்காததைத் தொடர்ந்து, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சித்தார்த்தின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

அதில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகனை பணத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றியுள்ளனர். எங்களது மகனை அழைத்துச்சென்றவர் இடைத்தரகராக இருக்கலாம். அரசு மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை அளித்திருந்தால் சித்தார்த் உயிர் பிழைத்திருப்பார். இதில் உள்ள மர்மங்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மணிமாரன், சாந்தி தம்பதியினர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...