பவானிசாகர் அருகே சேற்றில் சிக்கிய யானை வனத்துறையினரால் மீட்பு


சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பவானிசாகர் அணை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது. 

இந்த வனப்பகுதிகள் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

கடந்த ஒருமாத காலமாக சரிவர மழை பெய்யாததால் பவானிசாகர் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் யானைகள் குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக அணையின் நீர்த்தேக்கப்பகுதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன.



இந்நிலையில், அன்னூர் அடுத்த பவானிசாகர் சித்தன்குட்டையில் நீர் அருந்த வந்த காட்டு யானை ஒன்று சேற்றில் சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து, பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு வனத்துறையினர் உதவியுடன் மீட்டெழுந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...