கோவையில் அழகு கலை பயிற்சி முறையாக கற்றுத் தராததால் பணத்தை திரும்ப கேட்டு பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்

கோவையில் அழகு கலை பயிற்சியளிப்பதாக பணம் வாங்கி முறையாக கற்றுத் தராததால், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

Professional beautician என்ற அழகு கலை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனம், ஐ திரைப்படத்தில் அழகு கலை நிபுணராக வரும் நடிகை ஒஜாஸ் ராஜானி கொண்டு அழகு கலை குறித்து பயிற்சி அளிக்க உள்ளதாக கூறி அறிவிப்பை வெளியிட்டது. இதை அடுத்து கோவை,திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர், அவர்களிடமிருந்து கட்டணமாக 1500 முதல் 2500 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் அந்த நிறுவனம் அறிவித்த படி போதுமான இட வசதிகள் இல்லாமலும், ஒரே அறையில் 400 நபர்களை அமர வைத்துள்ளனர். இதனால் பயிற்சிக்கு வந்த பெண் ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு தனியாக அமர வைத்ததாக தெரிவித்தனர், மேலும் காலை முதல் ஒரே ஒரு வகுப்பு மட்டுமே எடுத்ததாகவும் அங்கு வந்த பெண்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் தங்களிடம் பெற்ற பணத்தில் ஆயிரம் ரூபாயாவது திருப்பி தர வேண்டும் என ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சரண்யா 500 ரூபாய் பணத்தை திருப்பி தருவதாக கூறினார், ஆனாலும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ரகளையில் ஈடுபட்டனர், இதை அடுத்து போலிஸார் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...