அறம் அறக்கட்டளை மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி இணைந்து நடத்திய "தூய்மைப் பணித் திட்ட நிறைவு விழா"

கோவை அறம் அறக்கட்டளை மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் தூய்மைப் பணித்திட்டம் நிறைவு விழா மற்றும் பள்ளி வளாக சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் இன்று கோவை கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் அத்தார் ஜமாத் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக அரசு உதவுபெரும் பள்ளியான அத்தார் ஜமாத் பள்ளிக் கட்டிடம் 30 ஆயிரம் சதுரடி பரப்பளவில் வர்ணம் அடித்து தரப்பட்டது. மேலும், பள்ளி வளாகத்தில் தூய்மையை கருத்தில் கொண்டு அப்பள்ளிக்கு குப்பைத்தொட்டிகள், வகுப்பறை தூய்மை செய்யும் கருவிகள், தண்ணீர் அருந்த பாத்திரங்கள், குவளை, கழிப்பிடத் தூய்மைக்கு வாளி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் அறம் அறக்கட்டளை நிறுவனர், உறுப்பினர்கள், அத்தார் ஜமாத் பள்ளி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...