பிஎஸ்ஜி கல்வி நிறுவன பிஜிடிஎம் துறை சார்பில் திருநங்கைகளுக்கு கைவினைப் பொருட்கள் பயிற்சிப் பட்டறை

கோவையில் செயல்பட்டு வரும் பிஎஸ்ஜி கல்வி மேலாண்மை நிறுவனத்தின் பிஜிடிஎம் துறை சார்பில் திருநங்கைகளுக்கான கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருநங்கைகள் 20 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு பொது மருத்துவமனை மேற்பார்வையாளர் மற்றும் ஐகான் ஆஃப் கோயமுத்தூர், ஸ்வச் பாரத் விருது பெற்ற திருநங்கை தஷ்லிமா நஷ்ரிம் பங்கேற்றார். மேலும், பிஎஸ்ஜி மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் நந்தகோபால், பேராசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் தஷ்லிமா நஷ்ரிம் பேசுகையில், திருநங்கைகள் தங்களது வாழ்வில் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பிஎஸ்ஜி குழுமம் தான் முதல்முறையாக "ஹிஜிரா" என்ற நிகழ்ச்சியை திருநங்கைகளுக்காக நடத்தியது. அந்த நிகழ்ச்சி திருநங்கைகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதன் மூலமே 48 சதவிகித திருநங்கைகள் பணிக்குச் சென்று தங்களது வாழ்வை மேம்பாட்டுடன் நடத்தி வருகின்றனர். எங்களுக்கு இவ்வாறான நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியதில் மாணவர்களின் பங்கு மிகவும் வாழ்த்துக்குறியது" என்றார்.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் வளையல், காதணி உள்ளிட்ட கைவினை அழங்காரப் பொருட்கள் செய்தல் மற்றும் மெகந்தி வரைதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...