சிறு, நடுத்தர வணிகங்களை வலுப்படுத்த புதிய முயற்சியில் மைக்ரோசாப்ட் கிளவுட் தொழில்நுட்பம்

கோயமுத்தூரில் உள்ள சிறு, நடுத்தர வணிகங்களில் மாற்றத்தை ஏற்படுத்த மைக்ரோசாப்ட் இன்டியா, கிளவுட்(cloud) அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளை வழங்க உள்ளது. இந்திய தரவு மையங்களில் உதவியுடன் மைக்ரோசாப்ட் அசுர், ஆபிஸ் 365, சிஆர்எம் ஆன்லைன் மற்றும் பேரிடர் மீள் சேவை போன்றவைகளை பயன்படுத்தி மைக்ரோசாப்ட் கிளவுட் தொழில்நுட்பம் இயங்குவதை பற்றி கோவை நகரில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களான பயோலைன் ஆய்வகம், மான்ட்ப்ளூ தொழிநுட்பம் விளக்கியுள்ளன.



இந்தியாவில் உள்ள சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் மையத்தை 50%க்கும் மேலாக பயன்படுத்தும் 8 மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. பயோலைன் பரிசோதனை மையமானது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட மையங்கள் இணைந்து செயல்படுகின்றன. இதுபோன்றே மான்ட்ப்ளூ தொழிநுட்பம் நிறுவனம் ஆபீஸ் 365 பயன்படுத்தி வணிகத்தை ஒருங்கிணைந்து, வணிகத்தை மேம்படுத்தியுள்ளது. இத்தகைய வசதியால், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவு 25% விற்பனையை அதிகரிக்கும்.

இது பற்றி மைக்ரோசாப்ட் இன்டியா எஸ்எம்பி வணிக தலைவர் மணிஷ் ஷர்மா கூறுகையில்; எங்களது கிளவுட் தொழில்நுட்பத்தை சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்துவதால், சர்வதேச வாய்ப்புகளை பெற்றுள்ளன. இந்த வணிகத்தை சக்தியுள்ளதாக மாற்றும் வகையில் சரியான தீர்வுகளை புதுமையாகவும், வளர்ச்சிக்கு உகந்தவையாகவும் மைக்ரோசாப்ட் அளிக்க கடமைப்பட்டுள்ளது. சிறு, நடுத்தர தொழில் வணிக அமைப்பானது, வணிக மாதிரிகளை உருவாக்குவதோடு மற்றும் தேவையான மாற்றங்களை குறைவான விலையில் அமைத்து தருகிறது. 

வாடிக்கையாளர்கள், வணிகத்தின் அளவை உயர்த்துவதோடு அதன் நோக்கத்தையும் நிறைவேற்ற உதவுகிறது. இந்தியாவில் சிறு வணிக நிறுவனங்கள் அதிக அளவில்  உள்ள நகரமாக கோயமுத்தூர் திகழ்கிறது. கிளவுட் தொழில்நுட்பத்தால் நோயாளிகளை நன்கு கவனிப்பதில் பயோலைன் ஆய்வகம் சிறப்பாக செயல்படுகிறது. மான்ட்ப்ளு தொழில்நுட்பம், வேலைத்திறனை முழுமையாக பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்துள்ளது. என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...