புலியகுளத்தில் குடியிருப்புகள் மத்தியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூன்று வீடுகள் எரிந்து சேதம்


கோவை புலியகுளம் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை புலியகுளம் பகுதியில் காவல் நிலையம் அருகே பஜார் வீதி என்ற இடத்தில் உள்ள ஓட்டு வீடுகளில் இன்று தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், லட்சுமி என்பவரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தானது, அடுத்தடுத்துள்ள வீடுகளுக்கும் பரவியது. 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின், அரை மணி நேரத்தில் தீயணைப்புத் துறையினர் தீயினை முழுவதுமாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் லட்சுமி, அந்தோனி அம்மாள், சகாயம் ஆகியோரின் வீடுகள் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள தீயணைப்புதுறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்து விட்டதாகவும், அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...