அலுமினியக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்யும் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி

தொழிற்கூடங்களின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை, அலுமினியக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்கிறது. இந்த ஆராய்ச்சிப் பணிக்கு டிஎஸ்டி (அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை) என்னும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், டிஎஸ்டி (தொழில்நுட்ப புத்துருவாக்க திட்டம்) திட்டத்தின் கீழ் அனுமதியும் ரூ.1 கோடியே 18 லட்சம் நிதியுதவியும் வழங்கியுள்ளது. 

இந்த நிதித்தொகை, மேற்சொல்லப்பட்ட ஆராய்ச்சிப் பணிக்காகச் செலவிடப்படுகிறது. சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்) – என்ஐஐஎஸ்டி, திருவனந்தபுரம் என்ற ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஆராய்ச்சிப் பணியின் முக்கிய அம்சங்கள்:-

  1. அலுமினியக் கழிவுகளை உருக்குவதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் வேண்டிய உபகரணங்களை அமைத்தல்.
  2. அலுமினியம் மற்றும் ஏனைய தனிமங்களின் அளவு விகிதம் குறித்த பரிசோதனை.
  3. அலுமினிய உலோகக் கலவையை மறுசுழற்சி செய்வதில் அறிந்து கொள்ளவிருக்கும் தொழில்நுட்பத் தகவல்கள்.


இந்தப் பணியின் ஆரம்ப நிலையாக தரமான அலுமினியத்திற்காக, தனிமத்தைச் சுத்தப்படுத்துதல், உலரவைத்தல் மற்றும் பொறுத்தமான ஊக்கிகளைக் கலக்குதல் என்னும் வரிசை முறையை முன்வைக்கிறது.

 

தொழிற்கூட அடிப்படை உபகரணங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. எஸ்என்ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டி முதன்மை செயல் அலுவலர் ராமகிருஷ்ணா, ரூட்ஸ் குழுமத்தின் சேர்மன் கே.இராமசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த அலுமினிய மறுசுழற்சி மையம் துவக்கப்பட்டது.

 



இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் பேசும் போது, இன்றைய கால சூழ்நிலையில் அடிப்படை மற்றும் அறிவு சார்ந்த ஆராய்ச்சி மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. இவை அனைத்தும் சிறு தொழில்கள் துவங்குவதற்கும் மாணவர்களின் எதிர்கால ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பிற்கும் உறுதுணையாக இருக்கும்.

இதற்கு சரியான ஊக்குவிப்பும், சரியான பயிற்சியும் தேவையானதாக கருதப்படுகிறது. சிறிது காலமே தேவைப்பட்டாலும், பொறியாளர்கள் ஆராய்ச்சி மூலக்கூறுகளை கண்டறிந்து நிபுணத்துவம் பெற்று புதிய கண்டுபிடிப்பினை உலகிற்கு படைக்க வேண்டும்" என்று கூறினார்.

 

இவ்விழாவில் கொடிசியா தலைவர் வி.சுந்தரம், கொடிசியா துணைத்தலைவர் வி.திருஞானம், ரூட்ஸ் காஸ்ட் லிட் இயக்குநர் ஓ.ஏ.பாலசுப்ரமணியம், கொடிசியா முன்னாள் தலைவர் தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கல்வி இயக்குநர் எ.எபினேசர் ஜெயக்குமார் அணிந்துரை வழங்கினார். பேராசிரியரும் துறைத் தலைவருமான பி.கருப்புசாமி ஆராய்ச்சிப் பணியை விளக்கிப் பேசினார். இறுதியாக கல்லூரி முதல்வர் என்.எ.அலமேலு நன்றியுரை வழங்கினார். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...