நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட தபெதிக, எஸ்எப்ஐ அமைப்பினர்


மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வையே மீண்டும் நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தியும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.எப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் கடுமையாக கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.எப்.ஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வை மீண்டும் நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் கோசங்களை எழுப்பினர்.

மேலும், காவல்துறையினரின் தடையை மீறி கோவை ரயில் நிலையம் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஆர்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...