வாயில் காயங்களுடன் குடியிருப்பு பகுதியில் நுழைந்த குட்டியானைக்கு ஆனைமலை சரணாலயத்தில் சிகிச்சை


கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றிவந்த மூன்று வயதுடைய குட்டியானை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீட்கப்பட்டு வனத்துறையினரால் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில், 70 சதவிகிதம் குணமடைந்த குட்டியானை கடந்த ஏப்ரல் 14ம் தேதியன்று பில்லூர் வனப்பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் காரமடை அருகேயுள்ள ஆதிமதியனூர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த அந்த குட்டி யானை மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. மேலும், ஆதிமதியனூர் குடியிருப்பு பகுதியில் இருந்த பலாமரத்தில் பழம் உண்பதற்காக அந்த யானை முயற்சித்துள்ளது. இதனால் அச்சமடைந்த அங்கிருந்த ஒரு குடியிருப்பு வாசிகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையிடம் புகார் அளித்தநிலையில், கால்நடை மருத்துவர் என்.எஸ்.மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் அந்த குட்டியானையை மையக்க ஊசி செலுத்தி கடந்த ஞாயிறன்று பிடித்தனர்.

தொடர்ந்து, டாப்சிலிப் ஆனைமலை புலிகள் சரணாலயம் வரகலியார் முகாமிற்கு அந்த யானை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மாவட்ட வனத்துறை அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் கூறுகையில், தற்போது கோவை வனப்பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள யானை மிகவும் குட்டி. வனத்துறையினரால் சிகிச்சைகள் வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதை கும்கி யானையாக பயிற்சியளிக்கலாமா அல்லது வனப்பகுதியிலேயே விடலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...