குடியிருப்பு பட்டா கோரி அனுப்பர்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், அனுப்பர்பாளையம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கோரி கோவை மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தலைமையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குடியிருக்க பட்டா வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் பட்டா வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் ஆகியோரைச் சந்தித்து தெரிவித்தபோது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களுக்கு தெலுங்குபாளையம் பகுதியில் இடம் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

சுமார், 3 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. தற்போது, பருவமழை பெய்யாததால் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த எங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...