இலவச நிலம் மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகர் பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இலவச நிலம் மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர்.

அதில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே புறம்போக்கு நிலத்தில் 200-கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 12ம் தேதி ரயில்வே துறை அப்பகுதி மக்கள் தற்போது வசிக்கும் இடத்தை காலி செய்ய வேண்டி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் நிலையில், எங்கள் குழந்தைகள் அருகாமையில் உள்ள பள்ளிகளில் பயின்று வருவதால் சுற்று வட்டார பகுதியிலேயே அரசு சார்பில் காலி இடம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...