உலக ஹீமோஃபீலியா தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி

உலக ஹீமோஃபீலியா தினத்தை முன்னிட்டு, ஹீமோஃபீலியா என்பது நோய் அல்ல குறைபாடே என்று விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் கோவையில் இன்று ஊர்வலம் நடைபெற்றது.



கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், கோவை ஹீமோஃபீலியா சொசைடியும் இணைந்து, ஹீமோஃபீலியா எனப்படும் இரத்தம் உறையும் தன்மை குறைபாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, "பிறக்கும் 6 ஆயிரம் ஆண் குழந்தைகளில் ஒருவருக்கு ஹீமோஃபீலியா பாதிப்பு ஏற்படக் கூடும். உறவு முறையில் திருமணம் செய்வதை தவிர்பது மூலம் ஹீமோஃபீலியாவை தவிர்க்க முடிவும். ஹீமோஃபீலியா என்பது நோய் அல்ல, அது குறையாடே என்று தெரிவிக்கப்பட்டது



மேலும், இந்த நோய் குறைபாடு உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம். இந்த சிகிச்சைகான மருந்து 10,000 ரூபாய். அதை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 



கோவை மாவட்டத்தில் ஹீமோஃபீலியா-வினால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 6 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த வகை பாத்கிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்" என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, இந்த பேரணி இரயில் நிலையம் வழியாக சென்று கோவை அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...