கோவையில் படுகொலை செய்யப்பட்ட பாரூக் நினைவாக உருவப்படம் திறப்பு

கோவையில் கடந்த மாதம் பாரூக் எனும் வாலிபர் சில மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் நினைவாக திராவிட விடுதலைக் கழகம் சார்பில் உருவப் படம் திறப்பு விழா கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது. இதனை, திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார்.



தொடர்ந்து அவர் பேசுகையில், பாரூக்கின் கொலை குறித்தான விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் சிறந்த புலனாய்வு செய்து கொலை செய்ய தூண்டியவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். இதற்கு திராவிட விடுதலைக் கழகமும் உறுதுணையாக இருக்கும். 



பெரியார் இயக்கம் எப்போதும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கும். பெரியார் இயக்கமும், முஸ்லீம் சமுதாயமும் ஒரு நல்லிணக்கமாக இருந்த உறவை தற்போது மத தூய்மை வாதம் பேசுகிற வெறி அமைப்பினர் ஊட்டிய காரணத்தினால் பெரிய அச்சம் ஏற்படுகிறது.

இந்துத்துவ ஆட்சி நடக்கிற வேலையில் இந்த கொலை வழக்கு திசை திரும்பி விடுமோ என்ற எண்ணம் நிலவுகிறது. இருந்தும் இந்த கொலை வழக்கில் சம்பந்தம் உடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் எவ்வித பாதிப்பும் இஸ்லாமியர்களுக்கும் பெரியார் திராவிட கழகத்திற்கும் ஏற்படாது என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...