உதகையை தூய்மைபடுத்திய காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து தூய்மை பாரதம் என்ற இலக்கை அடையும் வகையில் தூய்மை பணிகளை மேற்கொண்டது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில் 

துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள் மணிகண்டன், பாஸ்கரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த தூய்மை பணியின் போது, தாவிரவியல் பூங்கா சாலை, என்.சி.எம்.எஸ் பகுதி, கோத்தகிரி, குன்னூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பி.1, ஜி1, புது மந்து, மஞ்சூர் உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் 200 பேரும், 100 நகராட்சி பணியாளர்களும் பங்கேற்றனர். மேலும், 10 நகராட்சி வாகனங்களும் இப்பணிக்கு ஈடுபடுத்தப்பட்டன.



நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் உதகையின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து நடத்திய இந்த தூய்மை பணி மக்களிடமும் சுற்றுலா பயணிகளிடமும் பெரும் வரவேற்பை  பெற்றது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...