கோடை காலத்தில் கோவை மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கோயம்புத்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோடை காலத்தில் கோவை மாவட்டம் முழுவதும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 



கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “ புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டுமென்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற திட்டங்கள் இல்லை. குறிப்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து திட்டங்களும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் முதன்முறையாக 162 வருடங்களுக்கு முன்னர் இது போன்ற வறட்சி காணப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சூழ்நிலையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய அரசு குடிநீர் கையிருப்புள்ள குடிநீர் ஆதாரங்களாக பில்லூர் அணை, பவானி ஆற்று நீர், ஆழியார் ஆற்று நீர், சிறுவாணி அணை ஆகிய நீர் ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்கள் மூலமாக பெறப்படும் குடிநீர் சீரான முறையில் விநியோகிக்கப்பட்டு செயல்படுத்தி இந்த வறட்சி காலத்திலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு வரக்கூடிய 2048 ஆண்டின் எதிர்வரும் மக்கள் தொகை கணக்கில் கொண்டு அவர்களுக்கு தேவையான குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, பில்லூர் அணை ஆதாரமாக கொண்டு ஒரு குடிநீர் திட்டம் தயார் செய்வதற்கு மதிப்பீடு செய்வதற்கு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும், கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் காந்திபுரம் மேம்பாலப்பணிகள் மற்றும் இதர வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான கால அளவில் குடிநீர் வழங்க உரிய திட்டம் தயாரித்து அதன்படி நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மாநகராட்சி மூலம் அனைத்து திரையரங்குகள், உள்ளுர் தொலைகாட்சிகள், வானொலிகள், வாகனங்கள் மூலம் ஒளிப்பெருக்கி வைத்து விளம்பரம் செய்வதும், வீதிவீதியாகச் சென்று துண்டுப்பிரசுரங்கள் மூலமும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, பொது மக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, மாநகரப் பொறியாளர் (பொ) பார்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆலோசகர் சம்பத்குமார், செயற்பொறியாளர்கள் சுகுமார், ரவிச்சந்திரன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோக பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...