பீளமேடு ரயில்வே பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடிஏற்றி போராட்டம்

கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைக்காததை கண்டித்து அப்பகுதியில் உள்ள ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடிஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் மேம்பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. மேலும் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு வாகனங்கள் செல்ல தனியாக பாதை ஏற்படுத்தாமல் ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதிகள் வழியாக இயக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து இன்று பீளமேடு முருகன் நகர், ஹட்கோ காலனி ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடிகளில் கருப்பு கொடி ஏற்றி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் சுரங்கபாதை அமைத்து தர வேண்டும் எனவும், பீளமேடு ரயில் நிலையத்தில் இருந்து கனரக வாகனங்களை குடியிருப்பு பகுதிகள் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளதை ரயில்வே நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் கைவிட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...