தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பாடைசுமந்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கைது

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்திக்காத பிரதமர் மோடியை கண்டித்து, கோவையில் பாடை சுமந்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கைது செய்யப்பட்டனர். 



வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக கோவை இரயில் நிலையம் முன்பாக டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்திக்காத பிரதமர் மோடியை கண்டித்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி, ஒரு மாணவரை பாடை போல எடுத்து வந்து போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக குற்றம்சாட்டிய மாணவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். 

மேலும் விவசாயிகள் வங்கிகடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதையடுத்து இரயில் நிலையத்திற்குள் சென்று இரயில் மறியலில் ஈடுபட முயன்ற 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...