தென்னாட்டு மக்களை கருப்பர்கள் என்ற பாஜக தருண் விஜயை கண்டித்து கோவையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்னாட்டு மக்களை கருப்பர்கள் என்று பேசிய பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜயை கண்டித்து திராவிடர் கழகத்தினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா? என சர்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் பாஜக எம்.பி.யான தருண் விஜயின் சர்சைக்குறிய இப்பேச்சைக் கண்டித்து இன்று திராவிடர் கழகத்தினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தருண் விஜயின் கருத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வெளிப்பாடு என்றும், இது இன எதிர்ப்பு விதமான பேச்சு என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், வட நாட்டு மக்களால் தென்னாட்டு மக்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

கோவை தேற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவட கழகத்தைச் சேர்ந்த 40-கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...