காவல்துறையும் ஆளும் கட்சியினரும் இணைந்தே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைக்கின்றனர்- மக்கள் அதிகாரம் புகார்


திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாயன்று அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் இணைந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவயிடத்திற்கு வந்த கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் பெண்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அமைதியான முறையில் கலைந்து சென்ற நிலையில் ஒரு பெண்ணை கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் கடுமையாக தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இதுகுறித்து, கோவை காந்திபுரம் பகுதியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரம் பகுதி பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காவல்துறையினர் பெண்கள் என்றும் கூட பார்க்காமல் கடுமையாக தாக்கினர். பல ஆண்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது. 

தொடர்ந்து, அடுத்த அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை அத்துமீறி கைது செய்தனர். அதில் 7 பேரை விசாரணையின் அடிப்படையில் காவலில் வைத்துள்ளனர். 20 பேரை பல்லடம் ரைஸ் மில் பகுதியில் சட்டவிரோதமாக பிணைக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், டாஸ்மாக் மூலம் அரசியல் கட்சியினர், அதிகாரிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. அவினாசி தொகுதி எம்எல்ஏ-வே காவல்துறையை ஏவி மக்கள் மீது இந்த கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார் என தெரியவருகிறது. 

தாமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில் அந்த கடைகளை குடியிருப்பு பகுதியில் அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மக்கள் அதிகாரம் 2015 முதலே இதுகுறித்தான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. காவல் துறை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முக்கியத்துவம் அளிப்பது இல்லை. அரசியல் கட்சிகளும், காவல்துறையினரும் இணைந்தே கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்ந்து, இறுதி டாஸ்மாக் கடை இருக்கும் வரை மக்கள் அதிகாரம் போராடும்" என தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...