ஏப்ரல் 15ம் தேதியன்று சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற ஏப்ரல் 15ம் தேதியன்று (சனிக்கிழமை) பகல் 10 மணி முதல் 1 மணி வரையும் மற்றும் பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள இரு தேர்வு கூடத்தில் நடைபெறவுள்ள இத்தேர்வினை 546 நபர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வினை நடத்த 2 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு மொபைல் அலுவலர், ஒரு வீடியோ கிராபர் மற்றும் நமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆய்வு அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்வு மையங்களில் பாதுகாப்பின் பொருட்டு போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையில் மின்சாரம் வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கபட்ட நுழைவுச் சீட்டு கொண்டு வர வேண்டும் எனவும், தேர்வு அறைக்குள் மொபைல் போன் உள்ளிட்ட மின்னியக்க கருவிகள் எதையும் எடுத்து வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முதன்மை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...