சவுரிபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்- கைது

கோவை மாவட்டம் சவுரிபாளையம்  அருகே உள்ள தேர்வீதி பகுதியில் 1653 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

மேலும், கோவை மாநகரத்தில் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் அகற்றியதால் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுக்கடைக்கு ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

எனவே. மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் எனக்கோரி இன்று அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, தேர்வீதி பகுதி மக்களின் டாஸ்மாக் கடை எண் 1653 முற்றுகை போராட்டத்தால் 12 மணிக்கு திறக்கப்படவேண்டிய கடை தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...