கோவையில் 197 ஊராட்சிகள் திறந்தவெளி கழிப்பறையற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி முகமை தகவல்

கோவை மாவட்டம் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக 2016-17 ஆம் ஆண்டு அறிவிக்க தேர்ந்தெடுக்கப்பட்டு  இவ்வாண்டின் குறியீடான 56615 கழிப்பறைகளில் இதுவரை 47344 வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 



மொத்தமுள்ள 228 ஊராட்சிகளில் 197 ஊராட்சிகள் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் மற்றும குட்டி கமாண்டோ படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்ட 197 ஊராட்சிகளிலும் குட்டி கமாண்டோ படையினர் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மீதமுள்ள 31 ஊராட்சிகளில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சுகாதார ஊக்குவிப்பாளர்கள், குட்டி கமாண்டோ படையினர் ஆகியோரின் தொடர்ச்சியான சுகாதார விழிப்பணர்வு நடவடிக்கைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்புடன் மீதமுள்ள பணிகள் நிறைவு செய்யப்பட்டு 14.4.2017 அன்று சிறப்பு கிராம சபா மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட உள்ளது.

அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக மாற்றப்பட உள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...