பொது இடத்தில் மது அருந்தும் குடிமகன்கள்!


நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருக்கும் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவையடுத்து கோவையில் 180 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. 

நகரின் முக்கிய இடங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மது பிரியர்கள் ஊர்களுக்குள் இருக்கும் டாஸ்மாக்குகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதிகமான வாடிக்கையாளர்கள் வருவதால் தற்போது டாஸ்மாக் முன்பு ‘கியூ’ நிற்க தொடங்கியுள்ளது. 



இதில் கோவை ஜீ.வி. ரெசிடென்சி பகுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்மாக்கின் அருகே அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. மாலை நேரத்தில் மது அருந்த வரும் குடிமகன்கள், சரக்கை வாங்கி விட்டு அந்த காலி இடத்தை ஆக்கிரமித்து விடுகின்றனர். 

சிங்காநல்லூரில் இருந்து ஹோப்ஸ் செல்லும் சாலையில் தற்போது பாதாள சாக்கடை பணி நடப்பதால், அவினாசி சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலும் ஜீ.வி. ரெசிடென்சி சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். 



இந்த நிலையில், பொது இடத்தில் மது அருந்தும் குடிமகன்கள் போதையில் பாட்டில்களை சாலை நடுவே போட்டு உடைக்கின்றனர். இதனால் மாலை நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த டாஸ்மாக்கிற்கு வருபவர்கள் மசக்காளிபாளையம் செல்லும் சாலையின் இருபுறமும் வாகனகளை நிறுத்திவிடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

 

கண்டுகொள்ளாத காவல்துறை?

இந்த டாஸ்மாக் கடைக்கு அதிக அளவில் கூட்டம் வருவதை அறிந்த போலீசார், கடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மறைந்து நிற்கின்றனர். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து அனுப்பிவிடுகின்றனர். ஆனால், பொது இடத்தில் மது அருந்துபவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...