கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழாவில் குவியும் பக்தர்கள்

கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும்  வெகுவிமர்சையாக திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது.



அதன்படி இவ்வாண்டு திருவிழா கடந்த மார்ச் 28ம் தேதி துவங்கப்பட்டு தொடர்ந்து வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று வரை நடைபெறவுள்ளது.



கோவில் விழாவின் ஒருபகுதியாக இன்று மதியம் பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், புலியகுளம் பகுதி மக்கள் மட்டுமின்றி கோவையின் பல்வேறு பகுதியில் இருந்தும் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் பங்கேற்று பூவோடு எடுத்து வீதிவுலா வந்தனர்.



மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்த பக்தர்கள் புலியகுளத்தில் இருந்து ஒலம்பஸ், ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று மீண்டும் கோவில் வளாகத்தையே அடைந்தனர்.



மேலும், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் உடலில் அழகு குத்தியும், வாயில் மிகப் பெரிய அளவிலான அழகு குத்தியும் வீதியுலா வந்து அம்மனை வழிபட்டனர்.



கோவிலில் குவிந்துவரும் பக்தர்களுக்கென பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து ஆங்காங்கே மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கி வருகின்றனர்.

இம்மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டு வருவதால் அப்பகுதியில் காவல்துறையினர் பலர் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...