மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களை மூர்க்கத்தனமாக அடித்து விரட்டிய போலீஸ்! மக்கள் கடும் கண்டனம் .


திருப்பூர் மாவட்டத்தை அடுத்த சாமளாபுரம் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினரையும் வழிமறித்த அவர்கள், தங்கள் கோரிக்கையை எடுத்து கூறினர். இதை ஏற்றுக்கொண்ட அவர். மக்களிம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 



இந்த நேரத்தில் அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் மதுக்கடை அகற்றப்படும் என்று கூறியதாக தெரிகிறது.

இதை நம்பாத அப்பகுதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அங்கு குவிந்த காவல் துறையினர் பாரபட்சமின்றி பொதுமக்களை விளாசினர். பொதுவாக போராட்ட களத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் முதியவர்களை எச்சரித்து அனுப்பும் காவல்துறை இன்று கோர தாண்டவம் ஆடியது.



வீட்டில் அடுப்படியில் கிடக்கும் பெண்ணிற்கு வீதியில் என்ன வேலை? என்று நினைத்தாரோ என்னவோ? தடி நடத்திக் கொண்டிருந்த திருப்பூர் மாவட்ட கூடுதல் டி.எஸ்.பி. பாண்டியராஜன் திடீரென பெண்கள் பக்கம் திரும்பினார். பயந்து நடுங்கிய ஒரு பெண்ணின் கண்ணத்தில் 'பொளேர்' என்று ஒரு அடி. தொடர்ந்து, வீட்டுக்கு ஓடும் பெண்களை துரத்தி துரத்தி அடிக்கிறது காவல் துறை.இதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களையும் விட்டு வைக்கவில்லை.



காவல் துறையின் இத்தகைய செயலை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் கண்டனங்கள் பெருகி வருகிறது.

பெண்கள் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்திய திருப்பூர் கூடுதல் டி.எஸ்.பி.பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பத்திரிக்கையாளர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இன்றைய நிகழ்வை எண்ணிப் பார்க்கையில்பு ரட்சி கண்டு, போராட்டம் கண்டு மீட்டெடுத்த பெண்ணுரிமை இன்று கண்ணம் வீங்கி அமர்ந்ததோ என தோன்றுகிறது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...