திருமண வீடியோவை வழங்காத ஸ்டுடியோ உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டும் - கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருமண வீடியோவை வழங்காமல் இழுத்தடித்த நாட் போட்டோகிராபி நிறுவனம் இந்துமதி, கே.மயில்சாமி ஆகியோருக்கு ஸ்டூடியோ உரிமையாளர் பெற்ற பணம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்துடன் சேர்ந்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும், கோர்ட்டு செலவிற்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த இந்துமதி, கே.மயில்சாமி ஆகியோர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் எங்கள் குடும்ப திருமண நிகழ்வை வீடியோவில் பதிவு செய்யவும், போட்டோ எடுக்கவும் கோவை காந்திபுரத்தில் உள்ள நாட் போட்டோகிராபி நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தோம். இதற்காக முன் பணமாக ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் பெற்றுக் கொண்டனர்.

திருமணத்தை பதிவு செய்த பின்னர் வீடியோ மற்றும் போட்டோவை கொடுக்கவில்லை. பின்னர் அந்த நிறுவனத்தை மூடிவிட்டு வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்து விட்டனர். அந்த முகவரியை அறிந்து அங்கு சென்று கேட்டோம். ஆனால் பணத்தை திரும்பி தரவில்லை. வீடியோ கிடைக்காததால் குடும்ப உறுப்பினர்களிடம் காண்பிக்க முடியவில்லை.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட ஸ்டுடியோ உரிமையாளர் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு ஸ்டூடியோ உரிமையாளர் பெற்ற பணம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை வழங்குவதுடன் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும், கோர்ட்டு செலவிற்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...