தி மு க, அ தி மு க தலைவர்களின் வீடுகளின் முன் விவசாயிகள் போராடினால் இந்து மக்கள் கட்சியும் பங்கேற்கும்- அர்ஜுன் சம்பத் பேட்டி


தில்லியில் போராடும் விவசாயிகள் தமிழகத்தில் தி மு க, அ தி மு க தலைவர்களின் வீடுகளின் முன்பாக நிர்வாணப் போராட்டம் நடத்தினால் அந்த போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைதேர்தலை ரத்து செய்துள்ளதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பணம் கொடுத்த அ தி மு க-வின் இரு அணிகள், தி மு க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு தேர்தலை நடத்த  வேண்டும்.

இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக வரும் 12-ம் தேதியன்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

மேலும், சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு அல்ல என திராவிட இயக்கங்கள் சொல்வது கண்டனத்திற்குறியது. தமிழகத்தில் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் எனக் கோரி பனைமரத்துக்கு வழிபாடு நடத்திப்போராட்டம் நடத்த உள்ளோம்.

விவசாயிகள் தில்லியில் போராடுவது சரியானதல்ல. தில்லியில் விவசாயிகள் நடத்திய நிர்வாண போராட்டத்தை கலைஞர், ஜெயலலிதா வீட்டு முன் நடத்த வேண்டும். அந்த நிர்வாண போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியும் முழு ஆதரவு அளிப்பதோடு பாதுகாப்பும் வழங்கும்.

தமிழகத்தில் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். இந்தி எழுத்துக்களை திராவிடர் கழக அமைப்பினர் அழிப்பது தொடர்ந்தால் திராவிட கழகங்களின் கல்வெட்டுக்கள் மீது தார் பூசப்படும். 

தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அப்போராட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும். பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காகவே அய்யாகண்ணு தில்லியில் போராட்டம் நடத்துகிறார். மோடியை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடத்தப்படுகின்றது" என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...