கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்


தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட அளவில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களுக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற ஏப்ரல் 27ம் தேதியன்று காலை 8 மணி முதல் மதியம் 5 மணி வரை நடைபெறவுள்ளது. 

இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவ பரிசோதனை, இருதய சிறப்பு பரிசோதனை, இரத்த பரிசோதனை, கல்லீரல் மற்றும் குடலியல் பரிசோதனை, மூட்டுவலி மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை, சர்க்கரை அளவு கண்டறிதல், கண் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, இருதய நோய் சிகிச்சை, குழந்தைகள் நல சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.

மேலும் பரிசோதனைகளில் தீவிர நோய் தொற்று கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளது.  

எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மற்றும் தாலுகாவில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாமில் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயன்பெற வேண்டுபென கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...