கட்சி பிரதிநிதி போல மாவட்ட ஆட்சியர் பேசுவதாக மனுதாரர் புகார்!

கோவையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், டாஸ்மாக் கடை அமைக்க அனுமதித்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் செய்ய முடியும் என கோவை மாவட்ட ஆட்சியர் அளித்த பதிலால் மனு அளிக்க வந்தோர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் இருந்த 153 மதுபானக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், மூலடப்பட்ட கடைகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.



இக்கடைகளை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இராமநாதபுரம் பகுதி பொதுமக்கள் மதுபாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அப்போது மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுவினை தரையில் ஊற்றி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இராமநாதபுரம் 75-வது வார்டு மணிகண்டன் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து கோவையில் 153 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 



ஆனால், மூடப்பட்ட மதுபானக்கடைகளில் தொடர்ந்து மறைமுகமாக மது விற்பனை நடந்து வருகிறது. இராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடை, நஞ்சுண்டாபுரம், புளியகுளம், 80 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தாலும் தொடர்ந்து மது விற்பனை கள்ளத்தனமாக நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. 

இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் அளித்த போது, "மூடப்பட்ட மதுபானக்கடைகளுக்கு பதிலாக புதிய மதுபானக்கடைகளை திறந்தால் தான் சாலை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்" என ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 



மாவட்ட ஆட்சியரின் இந்த பதில், கட்சி பிரதிநிதி போல உள்ளது என புகார் தெரிவித்தார்.

இதேபோல ஒண்டிப்புதூர், காளப்பட்டி, ரத்தினபுரி, பாப்பநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்டவற்றில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புதிதாக மதுபானக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகம், மதுபானக்கடைகளை திறப்பதில் மட்டும் முனைப்புடன் செயல்படுவதாக புகார் தெரிவித்த பெண்கள், மதுபானக்கடைகளினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குடியிருப்பு பகுதிகளில் மதுபானக்கடைகளை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர். மதுபானக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரேநாளில் ஏராளமான பகுதி பொதுமக்கள் நடத்திய போராட்டங்களினால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...