நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு வசதியாக குறுஞ்செய்தி சேவை துவக்கம்


இந்தியப் பிரதமர் மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் படி, நீலகிரி தேயிலை வாரியம் சார்பில் சிறு தேயிலை விவசாயிகள் பயனடையும் வகையில் புதிதாக குறுஞ்செய்தி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் இத்திட்டத்தினை துவக்கி வைத்து பேசுகையில், நீலகிரி தேயிலை வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 25 ஆயிரம் சிறிய தேயிலை விவசாயிகளுக்கு மாதத்திற்கு 5 முறை என குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனால், விவசாயிகள் சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை அறிந்துகொண்டு பயனடையலாம்" என்றார்.



இதுகுறித்து, தேயிலை வாரிய நிர்வாக இயக்குனர் பால்ராசு கூறுகையில், இத்திட்டத்தின் கீழ் தேயிலை விவசாயிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மூலம், பச்சை இலை விலை நிலவரம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தர பராமரிப்பு மற்றும் மானியங்கள், சராசரி விலை உள்ளிட்ட முக்கிய குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம் என்றார்.

தேயிலை வாரிய துணை இயக்குனர் ஹரிபிரகாஷ் நாயர் கூறுகையில், இந்த குறுஞ்செய்தி அனுப்பும் திட்டத்தின் மூலம் வங்கி உடன் சிறிய விவசாயிகள் இணைக்கப்பட்டு அவர்களுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் சரியான காலத்தில் தங்களது பணியினை செய்து லாபம் மற்றும் உற்பத்தியினை அதிகரிக்க முடியும் என தேயிலை வாரிய துணைத் தலைவர் டி.ஹெக்டே தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...