ஆர்.கே. நகரில் திமுக வெற்றி பெறக்கூடாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோவையில் பேட்டி


திமுக காங்கிரஸோடு இணைந்து பெரிய அளவுக்கு தேசிய அளவில் ஊழல் செய்திருப்பதால் மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடுங்கள், திமுக-வுக்கு மட்டும் ஓட்டுப்போடாதீர்கள் என்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டியளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தருண் விஜய் தென்னியந்தியர்களைப் பற்றி பேசியது வெள்ளைக்காரன் எழுதி வைத்த புத்தகத்தை படித்து பேசியது ஆகும், நிறத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. ஜீன் அளவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை அனைவருக்கும் ஒரே ஜீன் தான். மேலும், தருண் விஜய் அந்த புத்தகத்தை தெளிவாக படிக்க வேண்டும்.

டெல்லியில் போராடும் விவசாயிகள் தன்னிடம் குறை ஒன்றையும் சொல்லவில்லை. அவர்களின் போராட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. முல்லைபெரியாறு விவசாயிகள் வேண்டுகோள் கொடுத்ததின் பேரில் உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கில் வெற்றி பெற்றுக்கொடுத்தேன். பாராளுமன்றத்தில் நாற்பது எம்பி-க்கள் விவசாய அமைச்சரையும், பிரதம மந்திரியையும் சந்திக்க வேண்டும்.

சசிகலாவை அடுத்து யார் ஜெயிலுக்குப் போவார்கள் என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு, சோனியா காந்தி, பா.சிதம்பரம், அவரது மனைவி, கார்த்தி மற்றும் கனிமொழி, ராஜா ஆகியோர் ஜெயிலுக்கு போவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.

பத்திரிகையாளர்கள் தேசத்துரோகிகள் என ஹெச்.ராஜா பேசவில்லை என்பதை தன்னிடம் கூறினார். நான் பொருக்கி என்று சொல்லாததை சொன்னதாக கூறியவர்கள் நிருபிக்க வேண்டும் என சாவல்விட்டும் யாரும் நிரூபிக்கவில்லை. 

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால் தேர்தல் நிறுத்தப்படும் என்று எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை. மேலும் வருமான வருத்துறை சோதனைக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. இது அதிகாரிகளின் நடவடிக்கை.

ஜம்மூ காஸ்மீரில் மட்டுமில்லாமல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் பகுதியிலும், கேரளாவிலும் உள்ளனர். இதை ஒடுக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா ஒரு கூட்டுப்படையை உருவாக்கினால் மட்டுமே இந்த அமைப்பை அழிக்க முடியும் என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...