ரூட்ஸ் நிறுவனம் சார்பில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு

கோவை, பந்தைய சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி.எஸ்.ஆர் திட்டப்பணிகளின் கீழ் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கவிதாசன் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.  



மேலும், அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கான கழிப்பிடம் மற்றும் அதற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான வசதியை செய்து கொடுக்க வேண்டுமென ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி கேட்டுக் கொண்டதை அடுத்து, ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது சி.எஸ்.ஆர் திட்டப்பணிகளின் கீழ் ரூபாய் 7.50 லட்சம் செலவில் மாணவர்கள் விடுதியில் கழிப்பிடம் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆழ்குழாய் கிணறு ஏற்படுத்தி செய்து கொடுக்க உறுதியளித்தது.

 

இதற்கு, கோவை ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கவிதாசன் மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.   

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...