சமூக சேவைப் பணிகள் குறித்து தனியார் பெரு நிறுவனங்களுடன் கோவை மாநகராட்சி ஆலோசனைக் கூட்டம்

சமூக சேவையில் தனியார் பெரு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றன. அதன்படி கோவை மாநகராட்சியுடன் இணைந்து சோசியல் கேபிட்டல், டாய்லட் ஃபர்ஸ்ட், நோ டம்பிங், நோ ஃபுட் வேஸ்ட், மை ஷாப்பிங் மை பேக், கோயம்புத்தூர் க்ளைமேட் ஜேஞ், ட்ரீ ட்ரேன்ஸ்பிளேஷன், டாக்டர்.கலாம் லைப்ரரி, ஸ்வச் பாரத் ஸ்வச் வித்யாலயா உள்ளிட்டவை இணைந்து கடந்த வருடம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தின.



இத்திட்டங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், தற்போது 2017 வருடத்தில் மேற்கொள்ள வேண்டிய சமூகப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவையில் ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், ரூட்ஸ் குழுமத்தின் இயக்குநர் ராமசாமி, சிஎஸ்ஆர் தலைவர்கள் எல்எம்டபில்யு-வின் நடராஜ், சிஆர்ஐ பம்ஸ்-யின் ராஜா மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்ற தன்னார்வ தொண்ட நிறுவனத்தினர், கோவை மாநகரத்தில் செயல்படுத்தி வரும் சமூகப் பணிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறினர். மேலும், திறந்தவெளிக் கழிப்பிடங்களை முற்றிலும் தடுக்க திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர். சன்ஸ் குழுமம் சார்பில் கிரடாய் அமைப்புடன் இணைந்து 50 கழிப்பிடம் கட்டித்தருவாக உறுதியளிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்நிகழ்வில், ஸ்வச் பாரத் பணியில் பங்கேற்று தங்களது முழு சேவையையும் வழங்கிவரும் உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். 

இக்கூட்டத்தில் தனியார் பெரு நிறுவனங்களும், மாநகராட்சியும் மட்டுமின்றி வங்கிகள், சமூக ஆர்வலர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...