அரசால் இடை முடக்கம் செய்யப்பட்ட வெல்டெக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம்

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1997, பிரிவு 3-இன் கீழ் அரசால் இடைமுடக்கம் செய்யப்பட்ட தி.வா.வெல்டெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனத்தின் அசையும் சொத்துக்கள் வரும் ஏப்ரல் 18ம் தேதியன்று முற்பகல் 11 மணியளவில் ஏலம் விடப்படவுள்ளது.



கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலம் குறித்தான மேலும் தகவலை அறிய ஏல நிபந்தனைகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வடக்கு வட்டாட்சியர் அலுவலக விளம்பரப் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.

ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், கோவை வடக்கு வட்டாட்சியர் மூலமாக ஏல சொத்தினை ஏலத் தேதிக்கு முன்பாக பார்வையிடலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...