நெல்லில் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் குணங்களின் ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு நிதியுதவி

ஊட்டச்சத்துக் குறைபாடு, பெண்கள் மற்றும இளம் வயது சிறுவகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கவல்லது. நமது நாட்டில் ஏறத்தாழ 56.2 சதவிகித பெண்கள் இரத்தசோகை குறைபாடுடனும் மற்றும் 0-3 வயதுள்ள குழந்தைகளில் 45 சதவீதம் சராசரிக்கும் குறைவான எடையையும் கொண்டுள்ளனர்.

இந்த குறைபாடுகளை தீர்க்கவல்ல சத்து மாத்திரைகள் மற்றும் சிறப்பு உணவுக்கான செலவு அதிகமாதலால், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலனுக்கு அது ஒரு எட்டாக்கனியாக உள்ளது.

நெல் போன்ற பிரதானப் பயிர்களில் மரபியல் மேம்படுத்தல் முறையில் ஊட்டச்சத்துக்களை செறிவுபடுத்துவதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.

இந்திய அரசாங்கத்தின் உயிர் தொழில் நுட்ப தொழிற்சாலை ஆராய்ச்சி உதவிகுழுமம், “குழந்தைகளின் உடல் நலம் காத்தல் என்ற ஒரு திட்டத்தினை அமெரிக்காவின் பில்கேட்ஸ் நிறுவனம், வெல்கம் டிரஸ்ட் மற்றும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து மருந்துகள் மற்றும் வேளாண் பொருட்களின் மூலம் போக்கிடும் திட்டத்தினை செயல்படுத்துகின்றது. 

இந்த திட்டத்தின் கீழ், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தினைச் சார்ந்த தாவர மூலக்கூறுவியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பவியல் மையமும், மதுரை மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலனை ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் குணமிக்க நெல்லின் மூலம் பேணுவதற்காக வரைந்த ஒரு திட்டம் 1.5 கோடி நிதியுதவியுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் உயர்விளைச்சல் மற்றும் மருத்துவக் குணமிக்க நெல்லில் உள்ள முக்கிய குணாதிசயங்களான ஃப்ளாவனாய்டுகள், லியூட்டின், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகச் சத்துக்களின் உயிர்நிலைப்புத்தன்மை மற்றும் சர்க்கரை நோயை எதிர்க்கவல்ல குறியீடுகளை ஆராய்ச்சி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...