நெடுஞ்சாலைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதைக் கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கு ஊதி சாவு மணியடித்து போராட்டம்

தமிழக நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் சங்கு ஊதி சாவு மணியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சாலை பராமரிப்பு பணிகளை தமிழக அரசு தனியாரிடம் வழங்குவதை கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து பணப்பலன் வழங்குதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலைப்பணியாளர்கள் சங்கு ஊதி சாவு மணி அடிக்கும் நூதன போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை- திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பாக சங்கு ஊதி சாவு மணி அடிக்கும் நூதன போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சாலையை பராமரிக்க 1300 கோடி ரூபாயினை எஸ்.பி.கே என்ற தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் ஒதுங்கி இருப்பதாகவும், அரசே இந்த பணிய நடத்தினால் 300 கோடி மட்டுமே செலவாகும் எனவும், தனியார் நிறுவனம் 1000 கோடி ரூபாய் லாபம்பார்க்கும் வகையில் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் சாலை பணியாளர்கள் கூறினர்.

மேலும், சாலைபணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக கருத வேண்டும். சாலைபணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வுவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்திய அவர்கள், இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...