வங்கி மேலாளர் வீட்டுக்கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

கோவை சிங்காநல்லூர் பகுதியில் வங்கி மேலாளர் ஒருவரின் வீட்டுக்கதவை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை துளசியம்மாள் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இவரும், இவரது மனைவியும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சுரபி அப்பார்ட்மெண்ட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் பணி நிமித்தமாக சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சிங்காநல்லூர் காவல் துறைக்கு வங்கி அதிகாரி ஸ்ரீகாந்த் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்க்கு  வந்த காவல் துறையினர் வீட்டின் கதவு, பீரோ ஆகியவற்றில் பதிவாகியுள்ள கைரேகைகளை பதிவு செய்து பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து அவர்கள் ஏதேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் 7 லட்ச ரூபாய் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...