கோவையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 2.5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கோவையில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வந்ததையடுத்து பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இன்று ஆர்.ஜி.தெரு, தாமஸ் தெரு உள்ளிட்ட நான்கு பகுதிகளில் குட்கா பொருட்கள் அதிகளவில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குட்கா, பான்மசாலா அதிகளவில் பதுக்கிவைத்திருப்பது கண்டறியப்பட்டது.



இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது கோவையில் பிடிபட்டுள்ள சுமார் 2.5 டன் எடையுள்ள இந்த புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாகவும் பொள்ளாச்சி உள்ளிட்ட கோவை மாநகரத்தில் புறநகர் பகுதிகளில் இருந்தும் இதுபோன்ற புகையிலைப் பொருட்கள் கோவைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுகிறது. 

கடந்த காலங்களில் புகையிலைப் பொருட்கள் கடத்தியவர்களே தற்போதும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குற்றச் செயலில் ஈடுபட்டுவருவோரை தொடர்ந்து தேடி வருகிறோம். 



மேலும், பேருந்துகள் மூலம் புகையிலைப் பொருட்கள் கடத்துவதை தவிர்க்க வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள், ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களிடமும் இதுகுறித்து அறிவுரை வழங்கியுள்ளோம்" என தெரிவித்தார்

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...