பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே நிர்வாக இயக்குனர் அனிருதன் கைது


சென்னையில் பல்வேறு இடங்களில் நில மோசடியில் ஈடுபட்டதாக பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே நிர்வாக இயக்குநர் அனிருதன் உள்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே, கோவை, பெங்களூர், கொச்சி மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம், சென்னை பள்ளிக்கரணையில் வீடு கட்டித்தருவதாகக் கூறி 20 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவின் நில மோசடி தடுப்புப் பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து, காசா கிராண்டே நிறுவன நிர்வாக இயக்குநர் அனிருதனை கைது செய்த போலீசார், சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், சென்னை முகப்பேரில் இயங்கிவரும் திரு பிரமோட்டர்ஸ் நிறுவன அதிபர் குமார், வீட்டுமனை வாங்கி தருவதாகக் கூறி 200-க்கும் மேற்பட்டவர்களிடம் 3 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாகவும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, திரு பிரமோட்டர்ஸ் அதிபர் குமாரையும் கைது செய்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...