மக்கள் விரோதபோக்கில் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து கோவை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழர் நலனில் அக்கறை செலுத்தாமலும், தொடர்ந்து தமிழகம் மற்றும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலை கடைபிடித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட கமிட்டியின் சார்பில் அக்கட்சியினர் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர காங்கிரஸ் துணை பொதுச் செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

சாய்பாபா காலனி பகுதியில் மாவட்டத் தலைவர் பி.எம்.ஜி.மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே போன்று சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச் செயலாளர் இ.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

கோவை மாநகர அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாய உழவுக்கு தேவையான கலப்பை, நெல் உள்ளிட்டவற்றை கையில் வைத்துக் கொண்டு, மத்திய அரசு வர்தா புயல் நிவாரணத் தொகையை குறைத்து வழங்குவது, தில்லியில் கடந்த 24 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை அழைத்து பேசாமல் இருப்பது, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டு தமிழர்களை வஞ்சிக்கும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...