கோவையில் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: காவல்துறை துணை ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்

எஸ்.என்.எஸ். இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புடன் இணைந்து போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடத்தினர்.



இன்று காலை கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இந்த பேரணி பந்தயசாலை காவல் நிலையத்தில் தொடங்கி, ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று மீண்டும் காவல் நிலையத்தை அடைந்தது.



முன்னதாக மாணவர்களிடம் துணை ஆணையர் சரவணன் பேசுகையில், ‘கோவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாலை விபத்தில் 34 மாணவர்கள் உயிரிழந்தனர். 

போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததாலே இந்த விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற விபத்துக்களை தடுக்க இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாணவர்களே விழிப்புணர்வு பேரணியை நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

இந்த பேரணியில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார்,  காவல் துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...