ஒரு குடம் குடிநீர் 12 ரூபாய், மாவட்ட நிர்வாகம் தங்களை புறக்கணிப்பதாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் மனு

கோவை, குனியமுத்தூர் பிளையார் புரம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருவதாக கூறியவர்கள் தாங்கள் வசித்து வரும் பகுதியில் உப்பு தண்ணீர் குழாய் மாநகராட்சி சார்பில் அமைக்கபட்டுள்ளதாகவும் இதில் தற்போது 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக கூறினர். 



மேலும் தங்கள் பகுதியில் தெரு விளக்கு கம்பம் அமைக்கபட்டு பல வருடங்கள் ஆகியும் விளக்குகள் பொருத்தப்படாமலேயே உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறியவர்கள் உப்பு தண்ணீர் முறையாக வழங்காத நிலையில் குடி நீருக்காக வாடகை வாகனம் அமர்த்தப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் நீர் எடுத்து வந்து உபயோகிப்பதாகவும் இதற்காக ஒவ்வெரு முறையும் ரூபாய் 350லிருந்து ரூபாய் 500 வரை செலவாகுவதாகவும் தனியார் வாகனம் மூலம் ஒரு முறை அதிகபட்சமாக 30 குடங்களில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுவதாக கூறிகின்றனர். 

மேலும், 1 குடம் குடிதண்ணீர் பெற ரூபாய் 12 செலவழிப்பதாக கூறினர். இது குறுத்து மாமன்ற உறுப்பினரிடம் கூறினால் ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கும் உங்களுக்கு எதுவும் செய்து தர முடியாது என கூறுவதாகவும் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்காக தங்களை தேடி வருவதாக குற்றம் சாட்டினர். தங்கள் பிரச்சனை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கபட்டும் எந்த ஒரு நடவடிக்கையும், மேற்கொள்ளவில்லை இதுவரை 3 ஆட்சியர்கள் மாறியுள்ளனர் ஆனால் தங்கள் பிரச்சனை இன்னும் தீரவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...