வீட்டு மனைபட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாத்திர பண்டங்களுடன் குடியேறும் போராட்டம்


கூடலூர், கவுண்டம்பாளையம் பேரூராட்சி தெக்குபாளையம் பகுதி பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாமில் பாத்திர பண்டங்களுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, 22 குடும்பங்கள் இங்கு வசித்து வரும் ஓடை புறம்போக்கு 30 வருடங்களுக்கு முன்பு வகையறா மாற்றம் செய்யபட்டு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதாக கூறினர். மேலும் அருகாமையில் வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் தாங்கள் வசித்து வரும் இடத்தை ஆக்கரமித்து விளையாட்டு மைதானம் பூங்கா ஆகியவை அமைக்க முற்பட்டதை தொடர்ந்து பேரூராட்சி தலைவரிடம் முறையிட்டதை தொடர்ந்து வீட்டுமனை பட்டா வழங்க ஆட்சேபனை இல்லை என தீர்மானம் நிறைவேற்றபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், அங்கு குடிநீர் தெரு விளக்குகள் என வசதிகள் செய்து கொடுக்கபட்டதாக தெரிவித்தவர்கள் தற்போது அரசு அறிவிப்பின்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்துவதின் பெயரில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் விவசாய நிலமாக இருந்த போது பயன்பாட்டில் இருந்த ஓடை தற்போது குடியிருப்பாக மாறியதை தொடர்ந்து வெள்ளம் வருவதற்கான வாய்ப்பு இல்லை என கூறி தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பாத்திர பண்டங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ஷீட்களை தரையில் விரித்துபடுத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...