லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் நீலகிரி தேயிலை ஏற்றுமதி பாதிப்பு

டீசல், பெட்ரோல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் நீலகிரியில் தேயிலை தூள் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் தேயிலை வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தூசி தர தேயிலை தூள் ஏலம் இந்த வாரம் நடத்தப்படவில்லை.

இந்த நிதி ஆண்டின் கடைசி நாள் என்பதால் அதிகப்படியான தேயிலை விற்பனை செய்யப்படவில்லை. மேலும், நிதிஆண்டின் இறுதி நாளான கடைசி வியாழனன்று டஸ்ட் தர தேயிலை தூள் ஏலம் நடத்த திட்டமிடப்பட்டது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அதனை கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஏலம் நிறுத்தப்பட்டது என குன்னூர் தேயிலை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் போஜராஜன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்து வருவதால் வரும் நாட்களிலும் அதிகப்பயான தேயிலைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கமடையும் என கருதப்படுகிறது. கொள்முதலாளர்களுக்கு தேயிலை சென்றடையாமல் உற்பத்திக்கான தொகை கிடைக்காது. இதனால், தற்போது பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...